Banner

யோவான் 8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

யோவான் 19: 26-27. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.

லூக்கா 1:28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

தேவதூதன் அவளிருந்த இடத்தில் பிரவேசித்து: பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம் முடனே; ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக் கப்பட்டவள் நீரே என்றார்.

    1. இந்த வாக்கியத்தினாலே தேவதூதன், அர்ச். கன்னிமரியாயை மூன்று வகையாய் விசேஷித்துப் புகழுகிறார். 1-வது, பிரியதத்தத்தினால், அதாவது: இஷ்டப்பிரசாதத்தினால் பூரணமானவளே அல்லது நிறைந்தவளேயென்றும்; 2-வது, கர்த்தர் உம்முடனிருக்கிறார், அதாவது: உம்முடைய ஆத்துமம் சர்வேசுரனுடைய சிம்மாசனம், அல்லது தேவாலயமாய் இருக்கிறதென்றும்; 3- வது, ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, அதாவது: உலகமுண்டானது முதல் உலகமுடியுமட்டும் உண்டான ஸ்திரீகளுக்குள்ளே அநேகர் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாயிருந்தாலும், எல்லோருக்கும் மேலாக நீர் மாத்திரம் விசேஷமாய் ஆசீர்வதிக்கப்பட்டவளென்றும் வசனிக்கிறார். ஓர் தேவதூதனால் இப்படிப்பட்ட புகழ்ச்சி சொல்லப்படுவதைப் பார்க்க மேலான மகிமை வேறேது? அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் 1:28

லூக்கா 1:38. அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.

LIFE

நீதிமொழிகள்

1:8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

மத்தேயு

6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.

THE BIBLE

WORD OF GOD

சங்கீதம் 1:2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

TRUE LOVE OF GOD

COMMANDMENTS

மத்தேயு 22: 37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;